உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதை கண்டு உன் உள்ளம் கொதித்தேழுந்தால்... நீ என் தோழனே.
- சே குவேரா
சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன்... நீ மனிதன்.
- வைரமுத்து
என் அண்டை வீட்டு யூதனை நாஜிக்கள் இழுத்து சென்றார்கள் நான் கவலை படவில்லை ஏன் என்றால் நான் யூதன் இல்லை, என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை நாஜிக்கள் இழுத்து சென்றார்கள் நான் கவலை படவில்லை ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை, அடுத்த நாள் என்னையும் இழுத்து சென்றார்கள் ஏன் என்று கேட்க நாதி இல்லை. - ஒரு ஜெர்மன் அறிஞர்.
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை. - மாவோ.
நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் இந்தியாவில் கொண்டு வந்த புத்தக புரட்சி திருவண்ணாமலையில் பள்ளி பருவத்திலேயே மார்க்சையும் tolstoy யையும் அறிமுகபடுத்தியது. இளநிலை மருந்தாக்கியலில் பட்டம் முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு தொழிற்சங்கம் மூலதனத்தை அறிமுக படுத்தி சிவந்த எண்ணங்களால் என்னை வண்ணமயமாக்கியது. என் கதை கவிதை கட்டுரைகள் என அனைத்தும் அடித்தட்டு மக்களை பற்றியதாகவே அமைந்து விடுகிறது. ஏன் என்றால் நானும் ஒரு பாட்டாளி வர்க்கம் என்ற பாசம் அன்றி வேறில்லை. இங்கு காணப்படும் அனைத்து புகை படங்களும் என்னுடைய lg rd 6230 என்ற ஒலிப்பதிவு அலைபேசியில் உள்ள vga camera மூலமே எடுக்கப்பட்டவை ஆகும்... படித்து விட்டு விமர்சனம் மட்டும் செய்யாமல் ஒரு திறன் ஆய்வாய் பதிவு செய்தால் என்னை திருத்தி கொள்ள மேலும் உதவியாய் இருக்கும்.. நன்றி வணக்கம்.
1 comment:
not so good...
Post a Comment